Tuesday, July 28, 2020

Sri Stuthi by vedanta desika in tamil - ஶ்ரீ ஸ்துதி வேதாந்த தேசிகர்

ஶ்ரீ ஸ்துதி



ஸ்ரீ வேதாந்த தேசிகரால் அருளப்பட்டது. இதை நித்யம் பாராயனம் செய்வதால் தாரித்ரியம் விலகி சகல சம்பத்துக்களும், ஆயுள், ஆரோக்யம், ஸ்ரீ மஹா லட்சுமியின் கடாட்சம் முதலியவைகளும் உண்டாகும்.

 

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்க கேஸரீ

வேதாந்தாசார்யவர்யே மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.

 

மாநா தீதப்ர திதவிபவாம் மங்கம் மங்களானாம்

வக்ஷ:(ஸ்) பீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா

ப்ர த்ய க்ஷா னுஶ்ரவிக மஹிம ப்ரார்த்தினீனாம் ப்ராஜானாம்

ஶ்ரேயோ மூர்திம் ஶ்ரியம-சரணஸ்-த்வாம் ரண்யாம் ப்ரபத்யே     || 1 ||

 

ஆவிர்பாவ:h கலஶஜல தாவத்வரே வாபி யஸ்யா

ஸ்தானம் யஸ்யா:(ஸ்) ஸரஸிஜவனம் விஷ்ணுவக்ஷ:(ஸ்) ஸ்தலம் வா

பூமா யஸ்யா:f புவனமகிலம் தேவி திவ்யம் பதம் வா

ஸ்தோக ப்ரஜ்ஞை ரனவதிகுணா ஸ்தூயஸே ஸா கதம் த்வம்     || 2 ||

 

ஸ்தோதவ்யத்வம் திஶதி பவதீ தேஹிபி:(ஸ்) ஸ்தூயமானா

தாமேவ த்வா மநிதர கதி: (ஸ்) ஸ்தோது மாஶம் ஸமான:(ஹ)

ஸித்தாரம்ப:(ஸ்) ஸகல புவனஶ்லாகனீயோ பவேயம்

ஸேவா பேக்ஷா தவ சரணயோ: ஶ்ரேயஸே கஸ்ய ந ஸ்யாத்     || 3  ||

 

யத் ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹின்யமீஷாம்

ஜன்மஸ்தேம-ப்ரயரசனா ஜங்கமா-ஜங்கமானாம்

தத்கல்யாணம் கிமபி யமிநாமேக லக்ஷ்யம் ஸமாதௌ

பூர்ணம் தேஜ:(ஸ்) ஸ்புரதி பவதீ-பாதலாக்ஷா-ரஸாங்கம்     || 4  ||

 

நிஷ்ப்ரத்யூஹ-ப்ரணயகடிதம் தேவி நித்யானபாயம் விஷ்ணுஸ்த்வம்

சேத்யனவதிகுணம் த்வந்த்வமன் யோன்ய லக்ஷ்யம்

ஶேஷஶ்சித்தம் விமலமனஸாம் மௌலயஶ்ச ஶ்ருதீனாம்

ஸம்பத்யந்தே விஹரணவிதௌ யஸ்ய ய்யா விஶேஷா:(ஹா)     || 5 ||

 

உத்தேஶ்யத்வம் ஜனனி பஜதோரூஜ்ஜி தோபாதிகந்தம்

ப்ரத்ய-க்ரூபே ஹவிஷி யுவயோரேக ஶேஷித்வ யோகாத்

பத்மே பத்யுஸ்தவ ச நிகமைர்-நித்யமன் விஷ்யமாணோ

நாவச்சேதம் பஜதி மஹிமா ர்த்தயன் மானஸம் :(ஹ)     || 6 ||

 

பஶ்யந்தீஷு ஶ்ருதிஷு பரித: ஸூரிவ்ருந்தேன ஸார்த்தம்

மத்யேக்ருத்ய த்ரிகுணபலகம் நிர்மித ஸ்தானபேதம்

விஶ்வா தீஶ ப்ரணயினீ ஸதா விப்ர மத்யூத வ்ருத்தௌ

ப்ரஹ்மே-ஶாத்யா தததி யுவயோ-ரக்ஷஶார ப்ரசாரம்     || 7 ||

 

அஸ்யேஶா நா த்வமஸி ஜகத:(ஸ்) ஸம்ஶ்ரயந்தீ முகுந்தம்

லக்ஷ்மீ:f பத்மா ஜலதிதனயா விஷ்ணுபத்னீந்திரேதி

யந்நாமானி ஶ்ருதிபரிபணான் யேவ மாவர் தயந் த

நாவர்தந்தே துரிதபவனப்ரேரிதே ஜன்மசக்ரே     || 8 ||

 

த்வாமேவாஹு: கதிசிதபரே த்வத்ப்ரியம் லோகநாதம்

கிம் தைரந்த: கலஹமலினை:(ஹி) கிஞ்சிதுத்தீர்ய மக்னை:(ஹி)

த்வத்ஸம்ப்ரீ த்யை விஹரதி ஹரௌ ஸம்முகீனாம் ஶ்ருதீனாம்

பாவாரூடௌ பகவதி யுவாம் தம்பதீ தைவதம் :(ஹ)     || 9 ||

 

ஆபன்னார்தி ப்ரஶமன விதௌ பத்ததீக்ஷஸ்ய விஷ்ணோஹோ

சக்யுஸ்த்வாம் ப்ரியஸஹசரீ மைகமத்யோப பன்னாம்

ப்ராதுர் பாவைரபி ஸமதனு:f ப்ராத்வமன் வீயஸே த்வம்

தூரோத்க்ஷிப்தைரிவ மதுரதா துக்தராஶேஸ் தரங்கைஹி     || 10 ||

 

தத்தே ஶோபாம் ஹரிமரகதே தாவகீ மூர்திராத்யா

தன்வீ துங்கஸ்தனபரனதா தப்த ஜாம்பூ னதாபா

யஸ்யாம் கச்சந்த்யுதய விலயைர் நித்யமானந்த ஸிந்தௌ-

ச்சா வேகோல் லஸி தல ஹரீ விப்ரமம் வ்யக்தயஸ்தே     || 11 ||

 

ஆஸம்ஸாரம் விததமகிலம் வாங்மயம் யத்விபூதி(ஹி)

யத்ப் ரூபங்காத் குஸுமதனுஷ: கிங்கரோ மேரூதன்வா

யஸ்யாம் நித்யம் நயனஶதகைர் ஏகலக்ஷ்யோ மஹேந்த்ர

பத்மே தாஸாம் பரிணதிரஸௌ பாவலேஶைஸ் த்வதீயை:(ஹி)     || 12 ||

 

அக்ரே பர்த்து:(ஸ்) ஸரஸிஜமயே பத்ரபீடே நிஷண்ணாம்

அம்போரா ஶேரதிகத ஸுதா ஸம்ப்லவா-துத்திதாம் த்வாம்

புஷ்பாஸாரஸ்தகிதபுவனை: புஷ்கலாவர்தகாத்யை:(ஹி)

க்லுப்தாரம்பா: கனக கலஶை:(ர்) அப்யஷிஞ்சன் கஜேந்த்ரா(ஹ)     || 13 ||

 

ஆலோக்ய த்வாமம்ருத ஸஹஜே விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம்

ஶாபாக்ராந்தா: ஶரணமகமன் ஸாவரோதா: ஸுரேந்த்ரா:(ஹ)

லப்த்வா பூயஸ்த்ரிபுவனமிதம் லக்ஷிதம் த்வத்கடாக்ஷை:(ஹி)

ஸர்வாகாரஸ்திர ஸமுதயாம் ஸம்பதம் நிர்விஶந்தி     || 14 ||

 

ஆர்த்த த்ராணௌ வ்ரதி-பிர் அம்ருதாஸார நீலாம் புவாஹை(ஹி)

ம்போஜா நாமுஷஸி மிஷதாமந்தரங்கை ரபாங்கை:(ஹி)

யஸ்யாம் யஸ்யாம் திஶி விஹரதே தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா

தஸ்யாம் தஸ்யாமஹமஹ மிகாம் ந்வதே ஸம்பதோகா:(ஹ)     || 15 ||

 

யோகாரம்ப த்வரித மனஸோ யுஷ்மதை காந்த்ய யுக்தம்

தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹ யே தாரயந்தே தனா யாம்

தேஷாம் பூமேர் தனபதிக்ருஹா தம்பரா தம்புதேர்வா

தாரா நிர்யாந்த்யதிகம் அதிகம் வாஞ்சிதானாம் வஸூனாம்     || 16 ||

 

ஶ்ரேயஸ்காமா: கமலநிலயே சித்ரமாம்னாய வாசாம்

சூடாபீடம் தவ பதயுகம் சேதஸா தாரயந்த:(ஹை)

சத்ரச்சாயா ஸுபகஶிரஸஶ்ச் சாமரஸ்மேர பார்ஶ்வா:(ஹ)

ஶ்லாகா ஶப்த ஶ்ரவணமுதிதா: ஸ்ரக்விண: ஸஞ்சரந்தி     || 17 ||

 

ஊரீகர்தும் குஶலமகிலம் ஜேதுமாதீ ராதீந்

தூரீகர்த்தும் துரிதநிவஹம் த்யக்து மாத்யாம வித்யாம்

அம்ப:(ஸ்) ஸ்தம்பாவதிக ஜனன க்ராம ஸீமாந்தரேகாம்

லம்பந்தே விமலமனஸோ விஷ்ணுகாந்தே தயாம்தே     || 18 ||

 

ஜாதாகாங்க்ஷா ஜனனி யுவயோ ரேக ஸேவாதிகாரே

மாயாலீடம் விபவமகிலம் மன்யமா நாஸ் த்ருணாய

ப்ரீத்யை விஷ்ணோ ஸ்தவ ச க்ருதி ந:f ப்ரீதிமந்தோ பஜந்தே

வேலா பங்க ப்ரஶமனபலம் வைதிகம் தர்மஸேதும்     || 19 ||

 

ஸேவே தேவி த்ரித ஶமஹிளா மௌலி மாலார்சிதம் தே

ஸித்திக்ஷேத்ரம் ஶமிதவிபதாம் ஸம்பதாம் பாதபத்மம்

யஸ்மிந் நீந் நமித ஶிரஸோ யாபயித்வா ஶரீரம்

வர் திஷ்யந்தே விதமஸி பதே வாஸுதேவஸ்ய தன்யா:(ஹ)     || 20 ||

 

ஸானுப் ராஸப்ரகடித தயை ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தைஹி

அம்ப ஸ்நிக்தைரம்ருதலஹரீ லப்த ஸ ப்ரம்ஹசர்யை:(ஹி)

கர்மே தாபத்ரயவிரசிதே காடதப்தம் க்ஷணம் மாம்

கிஞ்சந்ய க்லபிதமநகை ரர்த்ரயேதா: கடாக்ஷை:(ஹி)     || 21 ||

 

ஸம்பத்யந்தே பவபயதமீபான வஸ்த்வத் ப்ரஸாதாத்:(து )

பாவா:(ஸ்) ஸர்வே பகவதி ஹரௌ பக்தி முத்வேலயந்த:(ஹ)

யாசே கிம் த்வா மஹமஹித:(ஸ்) சீதலோ-தாரசீலா

பூயோ பூயோ திஸி மஹதாம் மங்களானாம் ப்ரபந்தாந்:(நு)     || 22 ||

 

மாதா தேவி த்வமஸி பகவான் வாஸுதேவ:f பிதா மே

ஜாத:(ஸ்) ஸோஹம் ஜனனி யுவயோரே கலக்ஷ்யம் தயாயா:

தத்தோ யுஷ்மத் பரிஜனதயா தேஶிகைரப்யதஸ் த்வம்

கிம் தே பூய:f ப்ரியமிதி கில ஸ்மேரவக்ரா விபாஸி     || 23 ||

 

கல்யாணானாமவிகல நிதி:h காபி காருண்யஸீமா

நித்யா மோதா நிகமவசஸாம் மௌலி-மந்தாரமாலா

ஸம்பத்-திவ்யா மதுவிஜயி:(ஸ்) ஸந்நிதத்தாம் ஸதாமே

ஸைஷா தேவீ ஸகலபுவன ப்ரார்த்தனா காமதேனு:(ஹு)     || 24 ||

 

உபசித குருபக்தே ருத்திம் வேங்கடேஶாத்து

கலி-கலுஷ நிவ்ருத்த்யை கல்ப்மானம் ப்ரஜானாம்

ஸரஸிஜ நிலயாயா:(ஸ்) ஸ்தோத்ர மேதத் படந்த:(ஹ)

ஸகல குசலஸ் ஸீ மாஸ் ஸார்வபௌமா பவந்தி     || 25 ||

 

|| இதி ஶ்ரீவேதாந்ததேஶிகவிரசிதா ஶ்ரீஸ்துதி: ஸம்பூர்ணா ||


Monday, May 4, 2020

Sivapuranam lyrics in tamil (thiruvasagam) (சிவபுராணம்) - சிவ புராணம், நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க,

சிவ புராணம்




நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியர் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதர் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வர் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனர்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம்.