Wednesday, April 17, 2024

Ramachandraya mangalam lyrics in tamil

ராமசந்த்ராய மங்களம் - தமிழில்

கேட்டதெல்லாம் தருபவனாம், ஜனகர் மகள் ஜானகியின்...
மனம் கவர்ந்த ராமனுக்கு மங்களமாகட்டும்!
கேட்டதெல்லாம் தருபவனாம், ஜனகர் மகள் ஜானகியின்...
மனம் கவர்ந்த ராமனுக்கு மங்களமாகட்டும்!

கோசலை மகன் இன்முகனாம், பக்தர்களை காப்பவனாம் 
இந்திரன்தொழும் ராமனுக்கு மங்களமாகட்டும்!
கோசலை மகன் இன்முகனாம், பக்தர்களை காப்பவனாம் 
இந்திரன்தொழும் ராமனுக்கு மங்களமாகட்டும்!

மாலையினை தரித்தவனாம், சந்தனத்து மேனியானாம் 
திலகமிட்ட அழகனுக்கு மங்களமாகட்டும்!
மாலையினை தரித்தவனாம், சந்தனத்து மேனியானாம் 
திலகமிட்ட அழகனுக்கு மங்களமாகட்டும்!

குண்டலங்கள் பூண்டவனாம், துளசி மாலை தரித்தவனாம்
கார்முகில் போல் தேகனுக்கு மங்களம் ஆகட்டும்!
குண்டலங்கள் பூண்டவனாம், துளசி மாலை தரித்தவனாம்
கார்முகில் போல் தேகனுக்கு மங்களம் ஆகட்டும்!

தேவகியின் திருமகனாம், தேவர்களின் தலைமகனாம், 
சீலகுரு ராமனுக்கு மங்களம் ஆகட்டும்!
தேவகியின் திருமகனாம், தேவர்களின் தலைமகனாம், 
சீலகுரு ராமனுக்கு மங்களம் ஆகட்டும்!

முழு நிலவு முகத்தவனாம், மலர்விழிகள் கொண்டவனாம், 
கருடன் மீது வருவோனுக்கு மங்களம் ஆகட்டும்!
முழு நிலவு முகத்தவனாம், மலர்விழிகள் கொண்டவனாம், 
கருடன் மீது வருவோனுக்கு மங்களம் ஆகட்டும்!

மாசில்லாத தூயவனாம், மறைகளிலே பண்டிதனாம், 
மலர் முகமாய் அருள்வோனுக்கு மங்களம் ஆகட்டும்!
மாசில்லாத தூயவனாம், மறைகளிலே பண்டிதனாம், 
மலர் முகமாய் அருள்வோனுக்கு மங்களம் ஆகட்டும்!

ராமதாசர் மெல் இதய, கமலமலர் உரைபவனாம், 
பத்ரகிரி தேவனுக்கு மங்களம் ஆகட்டும்!
ராமதாசர் மெல் இதய, கமலமலர் உரைபவனாம், 
பத்ரகிரி தேவனுக்கு மங்களம் ஆகட்டும்!

பத்ரகிரி தேவனுக்கு மங்களம் ஆகட்டும்!
பத்ரகிரி தேவனுக்கு மங்களம் ஆகட்டும்!!!


Sai Baba Morning Aarathi with Lyrics Tamil

சாயி பாபா காலை ஆரத்தி பாடல்:

கணேசா! சுவாமி!
கரம் குவித்துத் துதிக்கிறோம் 
ஆரத்தி பாடுவதற்கு - சீரடி சாயி பகவான் 
ஆரத்தி பாடுவதற்கு
அருள் புரிய வேண்டும் ஐயா!
கற்பகமே! அற்புதமே!
கணபதியே! சரணம் ஐயா!

கதிரவனும் வணங்கும் காலை ஆரத்தி 

சாயி பாபா காலை ஆரத்தி - 1

கரங்களைக் குவித்து உம்
பாதங்களில் தலையினை வைத்து வணங்குகிறோம் 
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் சாயிநாதரே!

பக்தியுடனோ இல்லாமலோ உமது 
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே சத்குரு நாதா!

என்றும் உமது திருப்பாதங்களைச் 
சேவிக்க வேண்டும் அப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளேதாருமையா 

துக்காராம் வேண்டுகிறார் எமது
நாமஜபம் கேட்டு,  அருள்கூர்ந்து 
எம் சம்சாரப்பற்றை நீக்கிடுங்களே

கரங்களைக் குவித்து உம்
பாதங்களில் தலையினை வைத்து வணங்குகிறோம் 
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் சாயிநாதரே!

சாயி பாபா காலை ஆரத்தி - 2

அதிகாலை வேளை பாண்டுரங்கா 
பள்ளி எழுந்தருள்வீர் 
வைஷ்ணவர் கூட்டம் 
கருட ஸ்தம்பம்வரை அங்கே நிற்கின்றார் 

முக்கிய வாசல் வரைதேவர்கள் 
கூட்டமாக நின்று, மிருதங்கத்தாள இசையுடனே 
பரவசமடைந்து பாடுகிறார் 

சுகர் சனகர் நாரதர் தும்புரு 
ஆகிய பக்தர்கள் கூட்டமும் 
சூலம் டமரு ஏந்தியவாறு 
கிரிஜாபதியும் உள்ளார் 

கலியுக பக்தர் நாமதேவர் 
நின்னுகிட்டு பாடுகிறார் 
ஜனாபாயும் பின்னால் அங்கே 
காத்துநிற்கின்றாள்.

சாயி பாபா காலை ஆரத்தி - 3

பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால் 
பாவங்கள் விலகிடுமே 

பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால் 
பாவங்கள் விலகிடுமே 

சம்சாரத்துன்பம் வியாதிகள் நீக்கி 
ஜடங்களான எம்மைக் காத்தருள்வீரே 
சம்சாரமாகிய இருண்ட இரவு 
உம்மைவிட்டு அகன்றதே 

உமது யோக மாயை அஞ்ஞானிகள் எம்மை
ஆசையில் ஆழ்த்தியதே - அந்த
ஆசையைப் போக்கும் சக்திகள் எமக்குச் 
சிறிதும் இல்லையே 

ஏ! சாயிநாத மகராஜ் 
உம் முக தரிசனம் தந்து காப்பீரே 
அஞ்ஞானிகளான நாங்கள் எவ்வாறு 
உம் பெருமைதனை வர்ணிபபோம் 

உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும் 
கவிபிரமனுமே சோர்ந்து விட்டனர் 
அருள் கூர்ந்து உமது பெருமையை
நீரே சொல்லவே பிரார்த்திப்போம் 

பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால் 
பாவங்கள் விலகிடுமே

சரணம் சரணம் என்று பக்தர்கள் பலரும் 
வாசலில் நிற்கின்றனர் - மலர்
தாமரை முகதரிசனத்தைத் தந்து 
அவர்களைக் காத்தருள்வீரே 

யோக நிலையில் உள்ள உம்மைத் தரிசித்து 
உள்ளம் உவகை கொள்கின்றது 
உமது வார்த்தை அமுதத்தைப் பருகி 
மேலும் உள்ளம் மகிழ்கின்றது 

ஆபத்தில் உதவும் லக்ஷ்மிநாதா 
குழந்தைகள் எம்மைப் பார்ப்பீரே 
தாபத்தை நீக்கி அருள்வீரே 
சுயநலத்தை நீக்கிப் பொறுத்தருள்வீரே 

சாயிநாத மகராஜ் - உன்
தரிசனம் தந்து காப்பீரே

ஓ சாயிநாத மகராஜ் - உன்
தரிசனம் தந்து காப்பீரே

உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும் 
கவிபிரமனுமே சோர்ந்து விட்டனர் 
அருள் கூர்ந்து உமது பெருமையை
நீரே சொல்லவே பிரார்த்திப்போம் 

பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால் 
பாவங்கள் விலகிடுமே

பாண்டுரங்கா எழுந்தருள்வீர் 
அனைவருக்கும் தரிசனம் தந்தருள்வீர் 
இருள் நீக்கித் துயில் களைந்து
உதயமாகி விட்டது

சாதுக்கள் முனிவர்கள் மகான்கள்
யாவரும் இங்கே இருக்கின்றார்
தூக்கமாகிய சுகத்தை நீக்கித்
தரிசனம் தந்தருள்வீர்

சாயி பாபா காலை ஆரத்தி - 4

ரங்க மண்டபத்திலும் ஆசாரவாசலிலும் 
பக்தர்கள் யாவரும் ஆவலோடு இங்கே 
காத்திருக்கின்றார்கள் 

சாயிநாதரை விழிக்கச்செய்ய 
ரகுமாயியை வேண்டுகின்றோம் 
தேவர்களை எல்லாம் அழைத்து வந்து
கருடனும் அனுமனும் துதிக்கின்றார் 

கதவு திரந்தது தரிசனம் கிடைத்தது
பேரானந்தம் அடைந்தது
விஷ்ணுதாசன் நாமதேவன் 
ஆரத்தி ஏந்துகின்றார் 

சாயி பாபா காலை ஆரத்தி - 5

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

காலை ஆரத்தி எடுப்போம்
தீபாராதனை செய்வோம் 

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

உறவினர்களே எழுந்திருங்கள் 
லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் 
தினமும் தீப ஆரத்தி எடுப்போம் 

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

சாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் 
காலை ஆரத்தி எடுப்போம் 
தினமும் ஆரத்தி எடுப்போம் 

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

மனத்திடத்துடன் பாபாவைப் பணிவோம் 
கிருஷ்ண நாதா தத்தா சாயி
உம்மை மனத் திடத்துடன் பணிவோம் 

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

காலை ஆரத்தி எடுப்போம் 
தீபாராதனை செய்வொம்

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் 
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்

சாயி பாபா காலை ஆரத்தி - 6

சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம் 
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர் 

காமம் பகை பொறாமை ஆகியவற்றைத் 
திரியாக்கி வைராக்கியம் என்ற நெய்யில் நனைத்தோம் 
சற்குரு சாயிநாதா!
பக்தி என்ற நெருப்பால் விளக்கை ஏற்றினோம் சாயிநாதா 

எம்குரு விளக்கை எரியச்செய்து 
துர்க்குணங்களை நீக்கிவிட்டீர் - எங்கள் 
அறியாமை இருளை அழித்து 
உயிர்களுக்கு உம்மை அறியச்செய்தீர் 

சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம் 
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று 
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர்

மண்ணிலும் விண்ணிலும் நிறைந்தவரே 
பக்தர்கள் மனத்தில் இருப்பவரே 
தத்தாத்ரேயரே சீரடியில் 
என்றும் சாயிநாதராய் இருப்பவரே 

பக்தர்களின் துன்பங்களை நீக்கிச் 
சுக அனுபவங்கள் கொடுக்கின்றீர் 
கலியுகத்தில் உம்மைப் போல 
பெரும் தெய்வம் வேறு எவரும் இல்லை 

சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம் 
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று 
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர்

சாயி பாபா காலை ஆரத்தி - 7

பக்தி நிறைந்த மனத்துடன் காலையில் 
ஜோதியைத் தரிசிக்கின்றோம் 

ஐந்து பிராணன்கள் என்ற ஜீவனால் 
தீப ஆரத்தி செய்கின்றோம் 

பண்டரிநாதன் பாதம் தனில் தலையை வைத்து வணங்கி
தலையை வைத்து வணங்கி
ஆரத்தி செய்கின்றோம் தீப ஆரத்தி செய்கின்றோம்

இப்பேரின்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது 
உமது முக தரிசனம் கோடி பாவத்தைப் போக்கிடுமே 

ராயியும் ரகுமாயியும் உமது இருபுறமும் நிற்கின்றனர் 
மயில் தோகையின் சாமரத்தால் பக்தியுடன் வீசுகின்றனர் 

ஜோதி மயமான ஆரத்தியால் பாபா ஜொலிக்கிறார் 
அழகே உருவான விட்டலுக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம் 

சாயி பாபா காலை ஆரத்தி - 8

சாதுக்களே எழுங்கள் 
மகான்களே எழுங்கள்
உங்கள் நலனை வேண்டுங்கள் 

மனித உடல் அழிந்த பின்
கடவுளைப் பணிவது இயலாது 

விடிகாலை வேளையில் எழுந்து 
செங்கல்லின் மீது நிற்கின்ற விட்டலின் 
பாதங்களையும் அருள் நோக்கையும் 
பக்தியுடன் பணியுங்கள் 

எழுங்கள் எழுங்கள் பக்த கோடிகளே 
விரைந்து ஆலயம் செல்லுவோம் 
காலை ஆரத்தியைத் தரிசித்துப் 
பாவங்கள் அனைத்தையும் போக்குவோம் 

தேவர்கள் தேவா! ருக்மணிநாதா!
துயில் நீங்கிப் பள்ளி எழுந்திடுவீர் 
திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க 
திருஷ்டி கழித்திட அனுமதி தருவீர் 

கோயிலின் வாயிலில் மங்கள வாத்தியங்கள் 
இனிமையாய் இசைக்கின்றன 
சற்குரு நாதரின் காலை ஆரத்தியும் 
சிறப்பாய் நடக்கிறது 

ஆசார வாசலில் சிங்கநாதம் பேரிகை 
ஆனந்தமாய் ஓலிக்கின்றது 
கேசவராஜ விட்டலின் பாதத்தை 
நலமுடன் வணங்குகிறார் 
நாம தேவர் நலமுடன் வணங்குகிறார் 

சாயி பாபா காலை ஆரத்தி - 10

காலை வேளையில் கதிரவன் பவனி வருகிறான்
உலகிற்கு நன்மை தருகிறான் 
இந்த வேளையில் குருத்தியானம் செய்பவர்களை 
ஒருபோதும் கலி நெருங்க மாட்டான் 

மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று 
சாயிநாதரை வணங்குகிறோம் 

இருள் நீக்கும் ஆதவன் போலச் சற்குருநாதர் 
அஞ்ஞானம் இருளை அழிக்கிறார்
கதிரவன் போல இல்லாமல் சாயிநாதர் இரவிலும் பகலிலும் ஜொலிக்கிறார்.

மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று 
சாயிநாதரை வணங்குகிறோம்

குரு அருளினால் கிடைத்த ஞானம்
என்றென்றும் நிலைத்திருக்கும் 
சமர்த்த குருவே சாயி நாதர்
எமக்கு அதனை அளிப்பீரே. 

மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று 
சாயிநாதரை வணங்குகிறோம்

சூரியன் தோன்றிச் சோம்பலை நீக்கி 
உலக உயிர்களை இயக்குகிறான் 
சத்குரு சாயி துர்க்குணங்களை நீக்கி 
உலக மக்களை இயக்குகிறார்

மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று 
சாயிநாதரை வணங்குகிறோம்

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிலும்
ஈடு இணையற்றவர் சற்குருநாதர் 
மேலான பலன்களைத் தருவதில் உம்மையே உமக்கு நிகராகப் பக்தர்கள் நினைக்கிறார்கள்

மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று 
சாயிநாதரை வணங்குகிறோம்

சாயி பாபா காலை ஆரத்தி - 11

சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 
சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 

இவ்வுலகம் முழுவதும் பொய்யால் 
நிறைந்தது என்று நீர் அறிவீரே 
இவ்வுலகம் முழுவதும் பொய்யால் நிறைந்தது என்று நீர் அறிவீரே

சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 

ஞானமற்றவர் குருடர் - எங்களுக்குத் தரிசனம் தந்தருள்வீரே
ஞானமற்றவர் குருடர் - எங்களுக்குத் தரிசனம் தந்தருள்வீரே

சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 

நாவு சோர்ந்து விட்டது இனி என்ன செய்வேன் என்று பணிகிறார் தாஸகணும் மகாராஜ்
நாவு சோர்ந்து விட்டது இனி என்ன செய்வேன் என்று பணிகிறார் தாஸகணு மகாராஜ்

சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 
சாயி நாதா உமதருளாலே - உன் 
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே. 

சாயி பாபா காலை ஆரத்தி - 12

தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே 
எம் பிரார்த்தனை ஏற்று 
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா

தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே 
எம் பிரார்த்தனை ஏற்று 
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா

மோகாந்த இருளில் - தவிக்கின்றோம் நாங்கள் 
மோகாந்த இருளில் - தவிக்கின்றோம் நாங்கள் 
ஆண்டவனை அறியாத - ஆண்டவனை அறியாத 
அஞ்ஞானி நாங்கள் - அஞ்ஞானி நாங்கள்

தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே 
எம் பிரார்த்தனை ஏற்று 
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா

வீணாகக் கழித்தோம் - காலத்தை எல்லாம் 
வீணாகக் கழித்தோம் - காலத்தை எல்லாம் 
மசூதியை பெருக்கும் - மசூதியை பெருக்கும்
துடைப்பமாய் இருப்போம் - துடைப்பமாய் இருப்போம்

தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே 
எம் பிரார்த்தனை ஏற்று 
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா

எம்மை ஆளும் தெய்வம் - நீர்தானே சாயீ
எம்மை ஆளும் தெய்வம் - நீர்தானே சாயீ
எம்மை ஆளும் சற்குரு - எம்மை ஆளும் சற்குரு
நீரே அருள் புரிவீரே - நீரே அருள் புரிவீரே

தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே 
எம் பிரார்த்தனை ஏற்று 
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா

சாயி பாபா காலை ஆரத்தி - 13

ஏழைகளாம் நாம் ஸ்ரீஹரிக்கு 
உண்ணுவதற்கு எதை கொடுப்போம் 

ஜெகந்நாதனாக விளங்கும் உமக்கு 
இந்த எளிய ரொட்டியை எப்படிக் கொடுப்போம் 

நள்ளிரவு தாண்டியும் உம்மைத் 
தரிசிக்கவில்லை என்றாலும் 

எம் சிந்தை உன்னிடத்தில் 
என்றும் இருக்குமாறு அருள் புரிவீரே

ஜெகந்நாதனாக விளங்கும் உமக்கு 
இந்த எளிய ரொட்டியை எப்படிக் கொடுப்போம் 

பக்தர்கள் - பலவகையான 
நைவேத்தியங்களுடன் இங்கே 
ஜெகந்நாதனாக விளங்கும் - உன் 
காலை ஆரத்திக்கு ஏங்தி உள்ளனர் 
உன் காலை ஆரத்திக்கு ஏங்கி உள்ளனர்.

சாயி பாபா காலை ஆரத்தி - 14

ஸ்ரீ சத்குரு சாயி பாபா - ஸ்ரீ சத்குரு சாயி பாபா 
இப்பூவுலகிபாவிகம் ஒன்றும் அறியாத பாவிகள் 

நெறி இல்லாதவர் - வழி தெரியாதவர் 
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள் 
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள் 

சாந்தி பொறுமையில் மேருமலை - எம்மை 
சம்சாரம் என்ற கடல் இருந்து 
சத்குரு சாயிநாதா காத்தருள்வீரே
சத்குரு சாயிநாதா காத்தருள்வீரே

திருவருள் தந்திடும் குருவரா 
பயம் என்ற கடலில் மூழ்கும் எம்மைப் 
பாசம் மிகக் கொண்டு 
பரந்தாமா எம்மைக் காப்பாற்றி அருள்வீரே

ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத மகராஜ் கீ ஜெய்!!!!


Saturday, April 13, 2024

Sai Baba Noon Aarathi with Tamil Lyrics - சாயி பாபா காலை ஆரத்தி பாடல்

சாயி பாபா மாலை ஆரத்தி பாடல்:

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 1

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்!
பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம்!
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்!

உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம்!
தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம்!
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்!

ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம்!
தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம்!

பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்!
பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம்!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 2

ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம்!
தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே!
ஆரத்தி ஸாயி பாபா!

கால்களின் தூசியே வழிகாட்டி
கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே!
கருணை காட்டி எமக்கருள்வீரே! - எமக்கருள்வீரே!
ஆரத்தி ஸாயி பாபா!

கருணையின் உருவே ஸாயி பாபா!
எங்கள் செயல்களுக்கு ஏற்ப
அநுபவங்களைத் தந்து ஆதரிக்கும் பாபா!
அருள்தருவீரே - அருள்தருவீரே!
ஆரத்தி ஸாயி பாபா!

கலியுகந் தனிலே அவதார நாதா!
சற்குண பிரஹ்மம் ஸாயி பாபா!
திசைகள் நான்கை யாடையாய்க் கொண்ட
திகம்ப ரேசுவரா தத்தாவ தாரா!
ஆரத்தி ஸாயி பாபா!

வியாழக்கிழமைதோறும் ஆலயம் வந்து
ஸம்ஸார பந்தம் அறவே நீங்கிட
அருள் தந்தாய் தயாபரா ஸத்குரு நாதா!
ஆனந்தம் தந்தாய் குருநாதா!
ஆரத்தி ஸாயி பாபா!

குறைவற்ற செல்வமேஉம் திருவடி சேவை!
அதுவே நீங்காத செல்வம்!
அதுவே நீங்காதிருக்க அருள்புரிவீரே!
அகமகிழ்ந் திடநலம் தருவீரே!
ஆரத்தி ஸாயி பாபா!

ஸாதகப் பறவை என்ற மாதவனே உமக்கு
ஆத்ம சுகம் என்ற அற்புத நீரை!
ஊட்டுகிறோம் - ஊட்டுகிறோம் எமக்கு
உறுதிமொழி தந்து காத்தருள்வீரே!
ஆரத்தி ஸாயி பாபா!

ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம்!
தரிசனம் தந்தருள்வீரே! - தரிசனம் கண்டு மகிழ்வோமே!
ஆரத்தி ஸாயி பாபா! - ஆரத்தி ஸாயி பாபா!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 3

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

அதர்மம் தோன்றும் போதுஅதை அழிக்கத் தோன்றுகின்றீர்!
நாத்திகரும் மனம்மாறி உமைத்துதிக்கச் செய்கின்றீர்!
கணக்கற்ற உருவங்களில் காட்சி தருகின்றீர்!
இரவும் பகலும் எளியோரின் துன்பத்தைத் துடைக்கின்றீர்!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

சந்தேகங்களைப் போக்க முஹம்மதியராய்த் தோன்றி!
மந்தபுத்தியுள்ள கோபிசந்த்ரனைக் காத்தருள் புரிந்தீரே!
பலதுன்பத்தைப் போக்ககுரு பரம்பரையில் வந்தீரே!
அனைவரையும் அன்புடன் அணைத்து மகிழ்விப்பீரே!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

இந்து முஸ்லீம் ஒற்றுமை நிலைப்பதை அறிவிக்க!
அவர்கள் ஒற்றுமையோடு இருக்கப் பிறந்து!
உலகத்தைக் காக்கின்றீர் உன்னதம் செய்கின்றீர்!
உலகத்தைக் காக்கின்றீர் உன்னதம் செய்கின்றீர்!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

தேவா ஸாயி நாதாஉம் பாதங்கள் பணிகின்றோம்!
மாயையில் மயங்கிய மக்களை உடனேவிடு விப்பிரே!
உமதருளால் துன்பங்கள் அனைத்தையும் தீர்ப்பீரே!
உம்புகழ் பாடும் திறனை கிருஷ்ணனாம்நீர் அளிப்பீரே!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

ஜய தேவ ஜய தேவ - பாபா ஸாயி நாதா!
தத்தா ஸாயி நாதா!
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா!
ஜய தேவ ஜய தேவ!

ஜய தேவ ஜய தேவ!
ஜய தேவ ஜய தேவ!
ஜய தேவ ஜய தேவ!
ஜய தேவ ஜய தேவ!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 4

லக்ஷ்மியின் கணவரே சீரடி ஸாயிநாதரே! சீரடி ஸாயிநாதரே!
லக்ஷ்மியின் கணவரே !
லக்ஷ்மியின் கணவரே சீரடி ஸாயிநாதரே! சீரடி ஸாயிநாதரே!
லக்ஷ்மியின் கணவரே !

சந்திர பாகா தீரத்தில் இருக்கும் பண்டரி நாதா! - ஸாயி நாதா!
நம்பினோரைக் காக்கும் தெய்வம்! - பண்டரி நாதா! - ஸாயி நாதா!

வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்! எல்லோரும்
கலியுக தெய்வத்தைக் கண்ணாலே பாருங்கள்!
எங்களைக் காப்பாற்ற ஓடி வாரும்
தாயே ஸாயி பாபா! - தாயே ஸாயி பாபா என்று
தாஸகணும் சொல்லி வணங்குகிறார்!

லக்ஷ்மியின் கணவரே சீரடி ஸாயிநாதரே! சீரடி ஸாயிநாதரே!
லக்ஷ்மியின் கணவரே !

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 4அ

சீரடியே பண்டரிபுரம்! - ஸாயியே எங்கள் விட்டல்!
ஸாயியே எங்கள் விட்டல்! - சீரடியே பண்டரிபுரம்!
சீரடியே பண்டரிபுரம்! - ஸாயியே எங்கள் விட்டல்!
ஸாயியே எங்கள் விட்டல்!1 - சீரடியே பண்டரிபுரம்!

சந்திர பாகா நதியினைப் போல!
சீரடித் தலமே பக்தி ப்ரவாகம்!
நம்பினோரைக் காக்கும் தெய்வம்!
பண்டரி நாதா - ஸாயி நாதா!

வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்! எல்லோரும்
கலியுக தெய்வத்தைக் கண்ணாலே பாருங்கள்!
எங்களைக் காப்பாற்ற ஓடி வாரும்
தாயே ஸாயி பாபா! - தாயே ஸாயி பாபா என்று
தாஸகணு சொல்லி வணங்குகிறார்!

சீரடியே பண்டரிபுரம்! - ஸாயியே எங்கள் விட்டல்!
ஸாயியே எங்கள் விட்டல்! - சீரடியே பண்டரிபுரம்!!!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 5

கண்களால் உம்மைப் பார்த்து மகிழ்வோம்!
அன்போடு உம்மைத் தழுவி மகிழ்வோம்!
பக்தி மிகுதியால் ஆரத்தி சுற்றி
பாதங்களை வணங்கி மகிழ்வோமே!

தாயும் நீரே தந்தையும் நீரே!
உறவும் நீரே நட்பும் நீரே!
கல்வியும் நீரே செல்வமும் நீரே!
ஸகலமும் நீரே தேவ தேவா!

உடல் வாக்கு மனம் புலன்கள்
புத்தி யாத்மா இயற்கை குணம்
அனைத்தாலான செயல்கள் யாவையும்
நாராயணனுக்கே அர்ப்பணிக்கிறோம்!

நாராயணனுக்கே அர்ப்பணிக்கிறோம்!!!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 6

ஹரே ராம ஹரே ராம
              ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
              கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

ஹரே ராம ஹரே ராம
              ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
              கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

ஹரே ராம ஹரே ராம
              ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
              கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

ஹரே ராம ஹரே ராம
              ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
              கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 7

பாபா அனந்தா எவ்வாறு துதிப்போம்!
நிலையான பாபா எவ்வாறு துதிப்போம்!
ஆதிசேஷன் உன்னைப் பாடிக் களைத்தான்!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

தினமும் துதிப்போம்! பாதங்கள் தம்மை!
அதனால் நிலைக்கும் குருபக்தி மனத்தில்!
மாயங்கள் தாண்டி ஸம்ஸாரங் காப்போம்!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

நல்லோர்க்கு லீலைகள் புரிந்தவர் பாபா!
பொய்யான வர்க்கு அரியவர் பாபா!
மெய்யான வர்க்கு எளியவர் பாபா!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

அரிது பெரிது மானிடப் பிறவி!
ஆன்மீகத் தாலே பயனை அடைவோம்!
பாபாவின் பக்தி அஹந்தை யகற்றும்!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

பாலகர் எங்கள் கரங்களைப் பற்றி!
கன்னத்தில் முத்தம் தந்திடும் தாய்நீர்!
அமுதத்தை ஊட்டி அணைத்திடும் தாய்நீர்!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

தேவர்கள் வணங்கும் ஸ்ரீஸாயி நாதா!
சுகமுனி வர்க்கு நிகரான பாபா!
காசிப் பிரயாகைக்கு நிகரான பாபா!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

கோபிகள் போற்றி வணங்கிடும் பாபா!
பரம்பொரு ளான உம்மைத் துதிப்போம்!
பக்தர்க்கு அருளும் ஸ்ரீஸாயி பாபா!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

ஏழைகள் நாங்கள் இருகரம் கூப்பி!
எப்போதும் தொழுவோம் பாபாவின் நாமம்!
மயக்கத்தைப் போக்கி இன்பத்தைத் தருவீர்!
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!

ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா!!!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 8

உலகினை ஆடையாய் அணிந்த ஸாயி பாபா! - பாபா!
எண்ணற்ற உருவத்தில் எங்கும் நிறைந்த ஸாயி பாபா! - பாபா!
வேதத்தின் ஸாரம் நீரே தேவ தேவா!
அனுசூயா அத்திரி குமாரா ஸாயி நாதா! - ஸாயி நாதா!

நீர்குளிப்பதும் ஜபிப்பதும் காசியிலே!
பிச்சை எடுப்பது கோலாப்பூரிலே!
துங்கபத்ரா நீரைப் பருகிடும் பாபா!
மஹூரில் தங்கும் தேவா ஸாயி பாபா! - ஸாயி பாபா!

இடது தோளில் ஜோல்னா பையையும்!
வலது கையிலே டமருவும் திரிசூலமும் ஏந்தி!
பக்தருக்கு ஆசிதந்து மகிழ்வூட்டும் பாபா!
முக்திக்கு வழிகாட்டும் ஸாயி நாதா! - ஸாயி நாதா!

பாதத்தில் பாதுகைகள் அணிந்துள்ள பாபா!
கமண்டலம் ஜபமாலை கரங்களில் ஏந்தி!
மான்தோலை இடையில் அணிந்த பாபா!
தலையில் ஜடையும் நாகக் கிரீடத்துடனும்
விளங்கிடும் பாபா! - விளங்கிடும் பாபா!

நாளும் தியானிக்கும் பக்தர் இல்லங்களில்!
லக்ஷ்மி வாஸம் செய்ய அருளிடும் பாபா!
குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுத்துக்
குடும்பம் செழிக்க அருள்கிறார் பாபா! - அருள்கிறார் பாபா!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 9

சச்சிதானந்த உருவமாய் விளங்கி
படைத்தல் காத்தல் அழித்தல் செய்து
பக்தரின் எண்ணம்போல் - வந்த இறைவா!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

அஞ்ஞான இருள் நீக்கும் கதிரவன் நீரே!
மனம்வாக்கு தமக்கு எட்டாத தலைவா!
குறையற்ற குணத்தோடு விளங்கிடும் வித்தகா
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

பக்தியோடு உம்மை வணங்கும் பக்தர்க்கு
ஸம்ஸாரக் கடல்கடக்கும் தோணியாய் விளங்கி
காப்பாற்றி அருள அவதரித்த தேவா!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

வேம்பின் அடியில் எப்போதும் இருந்து
அமுதத்தை அதன்மீது எப்போதும் பொழிந்து
கசப்பான இலையை இனிப்பாகச் செய்யும்!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!

கற்பகத் தருவான வேம்பின் அடியில்
கனிவுடன் சேவை செய்திடும் பக்தர்க்கு
ராஜ போகத்தையும் முக்தியையும் அளித்திடும்!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

விவரிக்க இயலாத விநோதங்கள் புரிந்து
அற்புதச் செயல்களால் சக்திதனைக் காட்டி!
இனிமை எளிமை கொண்ட இறைவா!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

ஸாதுக்கள் இளைப்பாற இடம்தரும் குருவே!
நல்லோர்கள் மகிழ்ந்து துதித்திடும் தேவா!
பக்தர்க்கு நல்லருள் வழங்கிடும் பாபா!
ஸத்குரு ஸாயிநாதா! வணக்கம்! வணக்கம்!!

பிறப்பற்ற வரம்பெற்ற பிரஹ்ம ஸ்வரூபா!
சுயம்புவாய் அவதரித்த ஸ்ரீராமனே!
உந்தன் தரிசனத்தால் புனிதமானோம் தேவா!
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்!!

ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்!!!

சாயி பாபா பகல் ஆரத்தி பாடல் - 10

ஓம் என்ற பிரணவ மந்திரத்தால் எவனொருவன் 
யாகம் முதலிய அறச்செயல்களை செய்து, 
ஒளி பொருந்திய தோற்றத்தோடு விளங்குகிறானோ, 
அவன் மட்டுமே கடவுளின் அநுக்ரகத்துடன் அவரோடு ஐக்யமாகி,
 அவர் அருளைப் பெறுகிறான்!

ஓம் ராஜாதி ராஜனாகிய உம்மை 
மனப்பூர்வமாகவும் ஐக்யத்துடனும் 
உம்முடைய அருளைப் பெற்றவனால் மட்டுமே, 
உம்மைப் பூஜிக்கும் அநுக்ரகத்தைப் பெற முடியும்!

அவ்வாறு அருள் பெற்றவனுக்கு மட்டுமே, 
குபேரனைப் போன்ற செல்வமும், 
அளவிட முடியாத ஆனந்தமும், 
அரசனைப் போன்ற வாழ்க்கையும் கிடைக்க அருள்புரிகிறீர்.

உலகம் போற்றும்; தனது நாட்டிலும் பேரும் புகழும் கிட்டும்; 
அங்கு துன்பங்கள் இருப்பதில்லை; 
உலகோர் அனைவராலும் போற்றப்படுவான்.
அப்படிப்பட்ட பக்தனுக்கு அளவற்ற ஆயுளையும் ஆனந்தத்தையும் நீர் அருள்கிறீர். 
நிலம் நீர் ஆகாயம் உள்ளளவும் அவன் போற்றப்படுகிறான்.

எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் 
வாயாரப் பாடி, மனமாரத் துதிக்கிறானோ, 
அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாஸம் செய்து, 
அநுக்ரகம் செய்து அருள் பாலிக்கிறீர்.

உன்னை சரணடைந்த பக்தர்கள், அவர்கள் அறிந்தோ அறியாமலோ, முற்பிறவியில் செய்த செயல்களாலோ, வாக்கினாலோ, உன் கதையைச் சொல்லும்போது ஏற்படும் பிழைகளாலோ, அடுத்தவரைப் பார்த்திடும் பார்வையாலோ, மனத்தால் தினம் தினம் செய்திடும் எல்லாத் தவறுகளையும் மன்னித்து, கருணையுடன் அருள்பாலிக்கும் பிரபுவாகிய ஸாயி நாதரே, ஸச்சிதானந்த ஸ்வரூபியாய்க் காட்சியளித்து அருள்பாலிப்பவரே,
எல்லோருக்கும் ஸகல மங்களங்களும் உண்டாக அருள்புரிவீராக.

|| ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத மஹராஜ் கீ ஜெய் ||

Wednesday, April 10, 2024

Om Jai Jagadeesha Harey lyrics in English

Om Jai Jagadeesha Harey

Om Jai Jagadeesha Harey
Swami Sathya Sai Harey
Bhaktha Jana Samrakshaka
Bhaktha Jana Samrakshaka
Parthi Maheshwara
Om Jai Jagadeesha Harey

Sashi Vadana Srikara Sarva Prana Pathey
Swami Sarva Prana Pathey
Aashritha Kalpa Latheeka
Aashritha Kalpa Latheeka
Aapadh Bandhava
Om Jai Jagadeesha Harey

Mata Pitha Guru Dhaivamu Mari Anthayu Neevey
Swami Mari Anthayu Neevey
Naada Brahma Jagan Natha
Naada Brahma Jagan Natha
Nagendra Shayana
Om Jai Jagadeesha Harey

Omkaara Roopa Ojaswi Om Sai Mahadeva
Sathya Sai Mahadeva
Mangala Arathi Anduko
Mangala Arathi Anduko
Mandhara Giridhari
Om Jai Jagadeesha Harey

Narayana Narayana Om
Sathya Narayana Narayana Narayana Om
Narayana Narayana Om
Sathya Narayana Narayana Om
Sathya Narayana Narayana Om
Om Jai Sadguru Deva

Om Jai Jagadish Hare Lyrics in tamil

சாய்பாபா ஆரத்தி

ஓம் ஜய் ஜகதீச ஹரே
ஸ்வாமி ஸத்ய ஸாயி ஹரே
பக்த ஜன ஸம்ரக்ஷக
பக்த ஜன ஸம்ரக்ஷக
பர்த்தி மஹேஸ்வரா
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே

சசி வதனா ஸ்ரீகரா ஸர்வ ப்ராண பதே,
ஸ்வாமி ஸர்வ ப்ராண பதே
ஆச்ரித கல்ப லதிகா
ஆச்ரித கல்ப லதிகா
ஆபத் பாந்தவா
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே

மாதா பிதா குரு தைவமு மரி அந்தயு நீவே
ஸ்வாமி மரி அந்தயு நீவே
நாத ப்ரம்ம ஜகந்நாதா
நாத ப்ரம்ம ஜகந்நாதா
நாகேந்த்ரா சயனா
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே

ஓங்கார ரூப ஓஜஸ்வி ஓ ஸாயி மஹாதேவா
ஸத்ய ஸாயி மஹா தேவா
மங்கள ஆரத்தி அந்துகோ
மங்கள ஆரத்தி அந்துகோ
மந்தர கிரிதாரி
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே

நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஓம் ஜெய் ஸத்குரு தேவா (3 முறை)

Sai Baba Mangala Harathi lyrics in English

Sai Baba Mangala Harathi


Om Sai Ram !!! 

Swami Sai Nathaya Shirdi Kshetra Vasaya Divya Mangalam
Mamakabhesthadaya Mahitha Managalam || Swami ||

Lokanathaya Bhaktaloka Samrakshakaya Nitya Mangalam
Nagaloka Sthuthyaya Navya Managalam || Swami ||

Bhaktha Brunda Vandithaya Brahma Swarupaya
Mukthi Marga Bodakaya Poojya Mangalam || Swami ||

Satya Tatva Bodakaya Sadhu Veshayathe
Nitya Mangala Dayakaya Nitya Mangalam || Swami ||

Shri Satchidananda Sadguru Sainath Maharaj ki Jai !!

Sai Baba Mangala Harathi lyrics in tamil

சாய்பாபா மங்கள ஹாரதி


ஓம் சாய் ராம்!!! 

ஸ்வாமி சாயி நாதாய ஷிர்டி க்ஷேத்ர வாசாய திவ்ய மங்களம்
மாமகபேஷ்டதய மஹித மங்களம் || சுவாமி ||

லோகநாதய பக்தலோக ஸம்ரக்ஷகாய நித்ய மங்களம்
நாகலோக ஸ்துத்யாய நவ்ய மங்களம் || சுவாமி ||

பக்தா பிருந்தா வந்திதாய ப்ரஹ்ம ஸ்வரூபாய
முக்தி மார்க்க போதகாய பூஜ்ய மங்களம் || சுவாமி ||

ஸத்ய தத்வ போதகாய சாது வேஷயதே
நித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம் || சுவாமி ||

ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கி ஜெய் !!

Om Sai Mangalam Sai lyrics in English

Om Sai Mangalam Sai lyrics in English:

Jai Jai Jai Sai Ram... (*3)

Om Sai Mangalam, Sai Naam Mangalam ( *2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Sadguru Sant Swaroop Sainath Mangalam (*2)
Param Pita Ka Roop Dinanath Mangalam (*2)
Patit Pavan Dhaam Shubsthaan Mangalam
Prani Prani Ka Hota Hai Kalyan Mangalam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam..

Shirdi Dhaam Ki Yatra Shub Darshan Mangalam
Sai Ki Samadhi Pujan Vandan Mangala (*2)
Sai Teerath Ki Mitti Hai Pavan Mangalam
Sar Pe Lagao Baney Jeevan Mangalam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Saibaba Ka Darshan Gungaan Mangalam
Sukh Shaanti Ka Milta Hai Vardaan Mangalam (*2)
Bhoomi Mangalam Sai Bhavan Mangalam
Pooja Paath Dhyan Sai Archan Mangalam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Dwarkamai Ki Hai Rasoi Mangalam
Dhuni Mangalam Sai Jyoti Mangalam (*2)
Dwarkamai Ka Sundar Dwaar Mangalam
Goonjti Sai Ki Jaijaikar Manglam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Mandir Mangalam, Mandir Dwaar Mangalam
Sai Ki Samadhi Aur Darbaar Mangalam (*2)
Soymya Roop Sai Ka Akaar Mangalam
Divya-wastra Sai Ka Shringar Mangalam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Saiji Ki Sundar Murat Divya Mangalam
Shees So Hai Swaran Mukut Nitya Mangalam (*2)
Sai Kanth Me Sau Hai Phulhaar Managalam
Sai Leela Dikhti Aprampar Mangalam (*2)

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Chadte Fal Aur Phool Madhu Mishtann Mangalam
Agar Dhoop Aur Deep Ha Hai Daan Mangalam
Sai Dhaam Ke Jeev Praani Vraksh Mangalam
Shirdi Me Sai Charan Ki Dhool Managalam

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Mitey Sare Paap, Sai Kirtan Mangalam
Kripa Mile Sai Ki Bane Jeevan Mangalam
Man-mandir Me Rakhlo Sai Murat Mangalam
Har Praani Me Dikhe Sai Soorat Mangalam

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Sai Ke Bhandaar Me Prasaad Mangalam
Sai Dete Apna Aashirwaad Mangalam
Saibaba Ka Darshan Gungaan Mangalam
Sukh-shaanti Ka Milta Hai Vardaan Mangalam

Sai Mangalam Sai Naam Mangalam
Om Sai Mangalam Sai Naam Mangalam (*2)
Pavan Bhoomi Shirdi Sai Dhaam Mangalam (*2) Sai Dhaam Mangalam...

Friday, April 5, 2024

Linga Bhairavi Stuti lyrics in English

Linga Bhairavi Stuti

The stuti describes the various qualities of what she can do and glorifies her as a powerful image. It talks about her as one who gives you fearlessness – not courage, fearlessness. They are very different. It talks about her as one who delivers you to ultimate liberation; as one who is fiercely involved with the life process, and as the giver of ecstasy. It talks about all the different things she can do, but the meaning is not so important. It is the sound which is important – the impact of the sound. If you allow the sound to work upon you, it will break down walls and lead you in a certain direction.

(You can chant 1, 3, 6, 9, or 11 cycles of Devi Stuti each day.)

Jai Bhairavi Devi Gurubyo Namah Shri
Jai Bhairavi Devi Swayambo Namah Shri
Jai Bhairavi Devi SwaDharini Namah Shri
Jai Bhairavi Devi Maha-Kalyani Namah Shri
Jai Bhairavi Devi Maha Badhrani Namah Shri
Jai Bhairavi Devi Maheshwari Namah Shri
Jai Bhairavi Devi Nageshwari Namah Shri
Jai Bhairavi Devi Visweshwari Namah Shri
Jai Bhairavi Devi Someshwari Namah Shri
Jai Bhairavi Devi Dukha Samhari Namah Shri
Jai Bhairavi Devi Hiranya Garbhini Namah Shri

Jai Bhairavi Devi Amrita Varshini Namah Shri
Jai Bhairavi Devi Bhaktha Rakshini Namah Shri
Jai Bhairavi Devi Soubhagya Dayini Namah Shri
Jai Bhairavi Devi Sarva Janani Namah Shri
Jai Bhairavi Devi Garbha Dhayini Namah Shri
Jai Bhairavi Devi Shoonya Vasini Namah Shri
Jai Bhairavi Devi Maha Nandini Namah Shri
Jai Bhairavi Devi Vameshwari Namah Shri
Jai Bhairavi Devi Karma Palini Namah Shri
Jai Bhairavi Devi Yonishwari Namah Shri
Jai Bhairavi Devi Linga Roopini Namah Shri

Jai Bhairavi Devi Shyama Sundari Namah Shri
Jai Bhairavi Devi Trinetri Namah Shri
Jai Bhairavi Devi Sarva Mangali Namah Shri
Jai Bhairavi Devi Mahayogini Namah Shri
Jai Bhairavi Devi Klesha Nashini Namah Shri
Jai Bhairavi Devi Ugra Roopini Namah Shri
Jai Bhairavi Devi Divya Kamini Namah Shri
Jai Bhairavi Devi Kala Roopini Namah Shri
Jai Bhairavi Devi Trishoola Dhaarini Namah Shri
Jai Bhairavi Devi Yaksha Kamini Namah Shri
Jai Bhairavi Devi Mukti Dhayini Namah Shri

Aum Mahadevi Linga Bhairavi Namah Shri
Aum Shri Shambhavi Linga Bhairavi Namah Shri
Aum Maha Shakti Linga Bhairavi Namah Shri
Namah Shri! Namah Shri! Devi Namah Shri!