Sunday, January 19, 2020

Vinayagar Kavasam lyrics in Tamil - விநாயகர் கவசம்

விநாயகர் கவசம்





வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர 
தேக மதோற்கடர் தாம் அமர்ந்து காக்க! 
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!
புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தட விழிகள் பால சந்திரனார் காக்க! || 1 ||

கவின் வளர் அதரம் கஐமுகர் காக்க!
தாலங்கணக் கிரீடர் காக்க!
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர் தாம் காக்க!
அவிர் நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!
தவிர்தலுறாது இளங்கொடி போல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! || 2 ||

காமரு பூ முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க! வாமமுறும் இருதோளும் 
வயங்கு கந்த பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க! 
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க! 
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க!
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க! || 3 ||

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்(ஸ்)டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கு லிங்கம் வியாள-பூடணர் தாம் காக்க!
தக்க குய்யந் தன்னை வக்கிர துண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க! || 4 ||

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க!
இரு பதம் ஏக தந்தர் காக்க! 
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! 
முன் கையை வணங்குவார் நோய் 
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க!
விரல் பத்தும் அத்தர் காக்க!
கேழ் கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
கிழக்கினிற் புத்தீசர் காக்க! || 5 ||

அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமா புத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
விக்கின வர்த்தனர் மேற்-கென்னுந் திக்க-தனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்உ தீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க! || 6 ||

ஏகதந்தர் பகல் முழுவதுங் காக்க! 
இரவினும் சந்தி-இரண்டன் மாட்டும் 
ஒகையின் விக்கின-கிருது காக்க!
இராக்-கதர் பூதம் உறு வேதாளம் 
மோகினி பேய் இவையாதி உயிர்த்திறத்தால் 
வருந்துயரும் முடிவிலாத வேக முறு 
பிணி பலவும் விலக்கு-பு-பாசாங்குசர்
தாம் விரைந்து காக்க! || 7 ||

மதி, ஞானம்,  தவம், தானம், மானம், ஒளி, புகழ்,
குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,
தானியம், கிரகம், மனைவி, மைந்தர், பயில்
நட்பாகிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!
காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க! || 8 ||

வென்றி(று), சீவிதம் கபிலர் காக்க!
கரியாதியெலாம் விகடர் காக்க!
என்றிவ்-வாறு இதனை முக்காலுமும் ஓதிடின்,
நும் பால் இடையூ று ஒன்றும் 
ஒன்றுறா, முனிவரர்காள், அறிமின்கால், 
யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்
தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்! || 9 ||


--- முற்றிற்று ---

1 comment:

  1. Thanks No one has recited this Kavacham except for MSS and TMS

    ReplyDelete