Tuesday, December 20, 2022

Sri Lakshmi Narasimha runa vimochana stotram lyrics in tamil - ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம்


 கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். 

ஓம் ஸ்ரீ லஷ்மி நாரஸிம்ஹாய நம‌:

|| ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம் ||

தேவதா கார்ய ஸித்யர்த்தம், ஸபா ஸ்தம்ப: ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 1 ||
(தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.)

லக்ஷ்ம்யா லிங்கித வாமாங்கம், பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 2 ||
(மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடு படுவதற்காக வணங்குகிறேன்.)

ஆந்த்ர-மாலாதரம் சங்க, சக்ராப்ஜ ஆயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 3 ||
(ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடு படுவதற்காக வணங்குகிறேன்.)

ஸ்மரணாத் ஸர்வ பாபக்ஞம், கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 4 ||
(நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.)

ஸிம்ஹ-நாதேன மஹதா, திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 5 ||
(மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.)

ப்ரஹ்லாத-வரதம், ஸ்ரீஸம், தைத்யேஸ்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 6 ||
(பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.)

க்ரூர க்ரஹை: பீடிதானாம், பக்தானாம் அபய-ப்ரதாம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 7 ||
(உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

வேத வேதாந்த யஜ்ஞேஸம், ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம், நமாமி ருண முக்தயே. || 8 ||
(வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.)

ய: இதம் படதே நித்யம், ருண விமோசன ஸம்ஸ்திதம்
அன்ருணீ ஜாயதே ஸத்யோ, தம் சீக்ரம் அவாப் நுயாத். || 9 ||
(யார் இந்த ருண விமோசன ஸ்லோகத்தை அனுதினமும் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல ஐஸ்வர்யத்தையும் அடைவார்.

|| ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹ பரப் பிரம்மனே நம: ||
( அதி சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. தினமும் ப்ரஹ்ம முகூர்த்தத்தில் 108 பாராயணம் செய்தால் தீராத கடன்கள் தீரும். 

மிகவும் கஷ்டம் என்றால் ஒரே நாளில் ப்ரஹ்ம முகூர்த்தத்தில் 1008 முறை ஜபித்து வர கைமேல் பலன் கிடைக்கும்.

5 வகையான த்ரோஹம்களின் காரணமாக ரூனா:
ருணம் (கடன்) என்பது பணத்துடன் மட்டுமே தொடர்புடையது என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் அது இல்லை. 5 வகையான தவறுகள் மனிதர்களால் அவர்களின் தற்போதைய வாழ்க்கையில் அல்லது கடந்தகால வாழ்க்கையில் செய்யப்படுகின்றன. இந்த தவறுகளின் கர்மா ருணம் (கடன்) அல்லது ருணா வடிவத்தில் சிக்கல்களைத் தருகிறது. ஐந்து வகையான தவறுகள் (திரோஹம்) :
1) பூத துரோகம் 2) ருஷி துரோகம் 3) மனுஷ்ய துரோகம் 4) பித்ரு துரோகம் மற்றும் 5) தெய்வ துரோகம்.

1. பூத த்ரோஹம் - மற்ற விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான தவறுகள் - இது நோய்களை விளைவிக்கும்.
2. ருஷி த்ரோஹம் - சாதுக்கள், சன்யாசிகள், உங்கள் குரு மற்றும் தர்ம வழியைப் பின்பற்றும் எவரையும் ஏமாற்றும் வகையில் வேண்டுமென்றே ஏமாற்றுதல் - இது உளவியல் சிக்கல்கள் மற்றும் பயங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
3. மனுஷ்ய துரோகம் - சக மனிதர்களை ஏமாற்றுதல் - இது வாழ்க்கையில் எதிரிகளை விளைவிக்கும்.
4. பித்ரு துரோகம் - பிரிந்த முன்னோர்களுக்கு கர்மங்களைச் செய்யாமை, பெற்றோரைக் கவனிக்காமை, கருக்கலைப்பு முதலியன - இது கிரஹ பீடத்தை உண்டாக்கும்.
5. தெய்வத் துரோகம் - கோவில் நிலங்கள், நகைகள் போன்றவற்றைக் கொள்ளையடிப்பது - இது கடுமையான நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

(ருண விமோச்சன நரசிம்ம ஸ்தோத்திரத்தை ஜபிப்பதன் மூலம், இந்த திரட்டப்பட்ட ருணா மற்றும் அதனுடன் தொடர்புடைய துன்பங்களில் இருந்து விடுபடலாம்.)

********************ௐௐௐௐ********************


No comments:

Post a Comment