Friday, December 23, 2022

Panchamukha Anjaneyar - பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் - ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்


🔯பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்🔯




🔯பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்🔯

1. கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே  
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

2. தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே  
கரால வதனாய நிருஸிம்ஹாய  
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

3. மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம  
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

4. வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே  
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

5. மேல் முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே  
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*

6 ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னால் உள்ள புராணக்கதை-

🔯ஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார். உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ். சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் என நம்பப்படுகிறது.
காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்
புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.

🔯ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள். அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.

🔯நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப செய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.
விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர். முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.
 
🔯காலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.

🔯சில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள். சரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.

🔯ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதுவதால் கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்கானவை.தூய்மையான ஆன்மீகத்துடனும் கவனத்துடனும் இந்த 40 செய்யுள்களையும் நீங்கள் படித்தால், உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். இந்த மந்திரங்களை தொடர்ந்து படித்து வந்தால், கடவுளின் ஆசியும் அனுகிரஹமும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவு கிடைக்கும்.

 ஆன்மீகத்தில் சரியான பாதையை நோக்கி செல்பவர்களுக்கு ஆஞ்சநேயர் சரியான பாதையை காண்பிப்பார் என நம்பப்படுகிறது.

அதே போல் தங்கள் மனதை கட்டுப்படுத்துவும் உதவுவார் என நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் மந்திரங்களை அதிக சத்தத்துடன் படித்தால், நம்மை சுற்றி நேர்மறையான ஆற்றல் திறன்கள் அதிகமான சுற்றும்
 அதனால் நாள் முழுவதும் நீங்கள் உற்ச்சாகத்துடன் இருக்கலாம். இது சோர்வு மற்றும் தாமதமாக்கலை போக்கி ஒருவரை திறமையானவராக மாற்றும். தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற சிறிய பிரச்சனைகளையும் கூட இது குணமாக்கும்.

🔯கெட்ட சகவாசம் அல்லது ஏதேனும் பழக்கத்திற்கு அடிமையானால், ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அவர்களை சீர்திருத்த அது உதவும். மந்திரங்கள் படிப்பதால் ஏற்படும் ஆற்றல் திறன் பக்தனின் இதயத்தை நேர்மறையான எண்ணம் மற்றும்

🔯உண்மையான பக்தி மற்றும் அர்பணிப்புடன் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் படித்து வந்தால், அனைத்து வித கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் நீங்கி, வாழ்க்கையில் ஒருமித்த கருத்து, மனநிறைவு, சந்தோஷம் மற்றும் அமைதியும் நிலவும். உறவில் நீடிக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும்.

🔯ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

*🔯ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-*

ஸர்வ கல்யாண தாதாரம்  
ஸர்வ வாபத்கந வாரகம்  
அபார கருணா மூர்த்திம்  
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

*🔯தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.*

  
*🔯அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-*

ஸ்ரீராம தூத மஹாதீர  
ருத்ர வீர்ய ஸமத் பவ  
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத  
வாயு புத்திர நமோஸ்துதே

🔯ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-

புத்திர் பலம் யசோதை ரியம்  
நிர்பயத்வ மரோகதா  
அஜாட்யம் வாக்படுத்வம்ச  
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

🔯கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர். 

வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். 


🔯மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.

பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார். நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

*🔯ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்*

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே  
வாயுபுத்ராய தீமஹி  
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

🔯நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்

இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும்.

*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*🙏*

No comments:

Post a Comment