Sunday, January 1, 2023

THIRUPALLIYEZHUCHI THIRUVASAGAM in tamil | திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

திருப்பள்ளியெழுச்சி



திருச்சிற்றம்பலம்! ! !

போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே !
      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு 
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் 
      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் 
      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் 
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் 
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் 
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் 
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

கூவின பூங்குயில்; கூவின கோழி; 
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து 
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் 
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் 
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் 
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து 
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் 
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் 
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் 
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் 
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு 
      அரிதென, எளிதென", அமரும் அறியார், 
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் 
மதுவளர் பொழில் திருஉத்தர கோச 
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; 
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; 
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! 
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் 
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் 
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி 
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; 
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் 
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் 
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் 
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !
 
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் 
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி 
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித் 
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் 
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் 
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் 
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

திருச்சிற்றம்பலம்! ! !

*********************************************

No comments:

Post a Comment