Sunday, January 1, 2023

வாராஹி மாலை - Varaahi Malai Lyrics Tamil

வாராஹி மாலை


ௐ ஶ்ரீ அன்னை வாராஹி போற்றி.
ௐ ஶ்ரீ பூமித்தாயே போற்றி.
ௐ ஶ்ரீ தாயே வாராஹி போற்றி. 

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டு கண்ணும் 
குறுமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

தேராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து 
ஈராறு இதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அர்ச்சித்துப் பூஜித்தபடி பணிந்தால் 
வாராதிறாள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

மெய்ச் சிறத்தாற் பணியார் மனம் காயம் மிக வெகுண்டு 
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வஜ்ரத் தந்த முகப்பணியாற் குத்து வாய் கடித்துப் 
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞறையே.

படிக்கும் பெரும் புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை 
அடிக்கும் இரும்புத் தடி கொண்டு பேய்கள் அவர் குருதி 
குடிக்கும் குடர் கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவி மன்றில் 
நடிக்கும் வாராஹி பதினாலுலகம் நடுங்கிடவே.

நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டிடும்
பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்
தொடும் கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே.

வேய்க்குளம் அன்ன தின்தோலால் வாராஹி தன் மெய் யன்பரை 
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார் தல நோய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலி கொண்டு போட்டுப் பிணக்குடரை 
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.

நாசப் படுவர் நடுங்கப் படுவர் நமன் காயிற்றால் 
வீசப் படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர் 
ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே 
வாசப் புது மலர்த்தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற் 
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே 
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி 
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திர் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண் சிவந்தார்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற் 
பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்டதுன் செவி கேட்கில்லையோ? அண்டக் கோளமட்டும் 
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தையாளர் தெரு எங்குமே.

எங்கும் எரியக் கிரிகள் பொடி பட எம் பகைஞர் 
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து 
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச் 
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

சக்தி கௌரி மஹமாயி ஆயி என் சத்துருவைக் 
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே 
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே 
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக்கின்றவன் நிற்குணத்தின்
நஞ்சணி கண்டத்தி நாராயணிதனை நம்புவதற்கு 
வஞ்சனை பண்ணி மதியாத பேரை வாழ்நாளை உண்ணக் 
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

மது மாமிசம் தனைத் தின்பால் இவள் என்று மாமறையோர் 
அதுவே உதாசினம் செய்திடுவார் அந்த அற்ப்பர்கள் தம் 
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து 
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய் தெய்வமே.

ஐயும் கிளியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை 
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க் 
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்ணெதிரே 
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே.

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள் 
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர் 
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் 
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே.

வருந்துனை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம் 
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப் 
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் 
விருந்து உண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே.

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலும் 
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச் 
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் 
மாறாக்கும் நேமிப் படையாள் தலை வணங்காதவர்க்கே.

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை 
ஓட விட்டேகை உலக்கை கொண்டேற்றி உதிரம் எல்லாம் 
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள் 
ஆடகக் கும்ப இணைக் கொங்கையால் எங்கள் அம்பிகையே.

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப் பூஞ் 
சேமக் கழலும் துதிக்க வந்தோருக்கு ஜெகம் அதனின் 
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹி வந்து 
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவ சக்தியே.

ஆராகிலும் நமக்கே வினைச்செய்யின் அவருடலும் 
கூராகும் வாளுக்கிரை இடுவாள் கொன்றை வேணி அரன் 
சீரார் மகுடத்தடி இணை சேர்க்கும் திரிபுரையாள் 
வாராஹி வந்து குடியிருந்தாள் என்னை வாழ்விக்கவே.

தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹி என் சத்துருவைப் 
பொறிப்பாள் பொறி எழச் செந்தீயில் இட்டு பொரிந்தத் தலை 
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்று பின் நெட்டுடலை 
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.

ஊராகிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு 
யாராகிலும் நமக்காற்றுவரோ? அடலாழி உண்டு 
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு 
வாராஹி என்னும் மெய்ச்சண்டப் பிரசண்ட வடிவி உண்டே.

உலக்கை கலப்பை ஒளி விடு வாள் கடகாழி சங்கம் 
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹி என் மாற்றலர்கள் 
இலக்கம் இல்லாத எழிற் பெரும் சேனை எதிர்வரினும் 
விளக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர் மேல் 
வஞ்சனை பில்லிக் கொடி தேவல் சூனியம் வைத்தவரை 
நெஞ்சம் பிளந்து நினக்குடல் வாங்கி நெருப்பினில் இட்டு 
அஞ்சக் கரங் கொண்டு அறுப்பால் திரிபுரை ஆனந்தியே.

அலைபட்டு நெஞ்சம் அலைந்து உயிர் சோர அலகைக் கையால் 
கொலை பட்டுடலும் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் 
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்க் கண்டீர் 
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினையாதவரே.

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே 
அந்திப்பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய் 
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் 
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற் கொடியே.

பொருப்புக்கு மாறு செய் ஆழியும் தோடும் பொருப்பை வென்ற 
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது 
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை 
நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நெர்க்குணியே.

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து 
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர் பால் 
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு 
கூறிட்டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே.

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் 
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே 
சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி 
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.

வீற்றிருப்பான் நவகோணத்திலே நம்மை வேண்டும் என்று 
காத்திருப்பாள் கலி வந்து அணுகாமல் என் கண்கலக்கம் 
பார்த்திருப்பாள் அல்லல் எங்கே என்றங்குச பாசம் கையில் 
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரி நல் 
தவம் ஆரும் மெய்யன்பர்க்கே இடர் சூழும் தரியலரை 
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு 
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே. 

வாராஹி.. வாராஹி தெய்வமே.. வாராஹி தெய்வமே.. வாராஹி தெய்வமே.. 

************************************

No comments:

Post a Comment